search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம்: மரத்தின் மீது கியாஸ் டாங்கர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உடல் கருகி பலி
    X

    அசாம்: மரத்தின் மீது கியாஸ் டாங்கர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உடல் கருகி பலி

    அசாம் மாநிலத்தின் நகான் மாவட்டத்தில் இன்று அதிகாலை மரத்தின் மீது கியாஸ் டாங்கர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உடல் கருகி பலியாகினர்.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37 வழியாக இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த கியாஸ் டாங்கர் லாரி ஜகலாபந்தா என்ற இடத்தின் அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கியாஸ் டாங்கர் வெடித்து தீப்பிடித்தது.

    இந்த கோர விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய மூன்று பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும், அருகில் இருந்த சில வீடுகள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×