search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் போலீஸ் அதிகாரி வீடு மீது தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு
    X

    காஷ்மீரில் போலீஸ் அதிகாரி வீடு மீது தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு

    ஜம்மு-காஷ்மீரில் போலீசார் வீடுகள் மீது தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடந்த 3 நாட்களில் 3-வது முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரது வீடு மீது தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். கடந்த 3 நாட்களில் 3-வது முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மந்திரி பரூக் அப்திரபி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.

    அதனை அடுத்து திங்கட்கிழமையன்று சோபியன் மாவட்டம் கீகம் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரி மற்றும் காஸ்டபிள் ஒருவரது வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    Next Story
    ×