search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
    X

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு வழிகளில் விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை தொடர்கின்றனர்.

    போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்களுடன் தி.மு.க. எம்.பி.யான திருச்சி சிவாவும் சென்றிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விவசாயிகளுடன் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது, விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்தனர்.
    Next Story
    ×