என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கெட்டுப்போன உணவு: பயணிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்28 March 2017 7:10 AM GMT (Updated: 28 March 2017 7:10 AM GMT)
நாட்டின் பெருமைக்குரிய ரெயில் சேவையாக கருதப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கேடு ஏற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:
டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் டெல்லி-சியெல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவு, கெட்டுப்போய் இருந்ததால் அதை சாப்பிட்ட சிலர் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகினர்.
குறிப்பாக, முன்பதிவு பெட்டிகளான B8 மற்றும் B9 பெட்டிகளில் பயணித்த சிலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. கெட்டுப்போன உணவை தந்து தங்களை மோசமான எதிர்விளைவுக்கு உள்ளாக்கிய ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
அசனால் ரெயில் நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நின்றபோது, கீழே இறங்கிய பல பயணிகள் நடைமேடையில் ஒன்று திரண்டனர். ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அசனால் நிலையத்தில் உள்ள ரெயில்வே காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்த பயணிகள், அதன்பிறகு சியெல்டாவை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் டெல்லி-சியெல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவு, கெட்டுப்போய் இருந்ததால் அதை சாப்பிட்ட சிலர் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகினர்.
குறிப்பாக, முன்பதிவு பெட்டிகளான B8 மற்றும் B9 பெட்டிகளில் பயணித்த சிலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. கெட்டுப்போன உணவை தந்து தங்களை மோசமான எதிர்விளைவுக்கு உள்ளாக்கிய ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
அசனால் ரெயில் நிலையத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நின்றபோது, கீழே இறங்கிய பல பயணிகள் நடைமேடையில் ஒன்று திரண்டனர். ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அசனால் நிலையத்தில் உள்ள ரெயில்வே காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்த பயணிகள், அதன்பிறகு சியெல்டாவை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X