search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூரில் இன்று நீரோடைக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 10 பேர் பலி
    X

    மணிப்பூரில் இன்று நீரோடைக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 10 பேர் பலி

    மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் இன்று நீரோடைக்குள் பஸ் பாய்ந்த கோர விபத்தில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
    இம்பால்:

    மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிவந்த அந்த பஸ், இன்று அதிகாலை இம்பாக்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.



    அதிகாலை சுமார் 4 மணியளவில் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்குமாய் பகுதியை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் ஓரத்தில் உள்ள நீரோடைக்குள் பாய்ந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சுக்குள் சிக்கிகொண்ட பயணிகளில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினருக்கான ராணுவ மருத்துவமனை மற்றும் இதர மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    Next Story
    ×