என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணிப்பூரில் இன்று நீரோடைக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 10 பேர் பலி
Byமாலை மலர்27 March 2017 4:59 AM GMT (Updated: 27 March 2017 4:59 AM GMT)
மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் இன்று நீரோடைக்குள் பஸ் பாய்ந்த கோர விபத்தில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இம்பால்:
மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிவந்த அந்த பஸ், இன்று அதிகாலை இம்பாக்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.
அதிகாலை சுமார் 4 மணியளவில் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்குமாய் பகுதியை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் ஓரத்தில் உள்ள நீரோடைக்குள் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சுக்குள் சிக்கிகொண்ட பயணிகளில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினருக்கான ராணுவ மருத்துவமனை மற்றும் இதர மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிவந்த அந்த பஸ், இன்று அதிகாலை இம்பாக்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.
அதிகாலை சுமார் 4 மணியளவில் மாநில தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்குமாய் பகுதியை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் ஓரத்தில் உள்ள நீரோடைக்குள் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சுக்குள் சிக்கிகொண்ட பயணிகளில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினருக்கான ராணுவ மருத்துவமனை மற்றும் இதர மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X