search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: போலீசை தாக்கி துப்பாக்கியை பறித்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
    X

    காஷ்மீர்: போலீசை தாக்கி துப்பாக்கியை பறித்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை போலீசாரை தாக்கி துப்பாக்கியை பறித்துச் சென்ற தீவிரவாதிகள் இருவர் போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பத்கம்போரா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசாரை தாக்கிய இரண்டு தீவிரவாதிகள், அவர்கள் வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றனர்.

    இதையடுத்து அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், இச்சம்பவம் தொடர்பாக ஒரு தீவிரவாதியை கைது செய்தனர். மேலும், அப்பகுதியில் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதை கண்டறிந்த போலிசார் அந்த பகுதியை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரின் இந்த அதிரடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அங்கிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
    Next Story
    ×