என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியீடு: கேரள மந்திரி ராஜினாமா
Byமாலை மலர்26 March 2017 11:16 AM GMT (Updated: 26 March 2017 11:16 AM GMT)
பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியான நிலையில், கேரள போக்குவரத்து துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில அரசில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகிப்பவர் ஏ.கே.சசீந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரான இவர் ஆளும் இடதுசாரி முன்னனி அரசின் கூட்டணியில் உள்ளார். இந்நிலையில், பெண் ஒருவருடன் ஆபாசமாக சசீந்திரன் பேசும் ஆடியோ ஒன்று அங்குள்ள தொலைக்காட்சிகளில் இன்று மதியம் வெளியானது.
இதையடுத்து, உடனே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக சசீந்திரன் அறிவித்தார். மேலும், ”அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக எதிரிகள் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். நான் பேசியதாக வெளியான ஆடியோ முற்றிலும் பொய்யானது. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உடைத்து வெளியே வருவேன்” என கூறியுள்ளார்.
அரசியல் நாகரிகம் கருதியே பதவியை ராஜினாமா செய்வதாகவும், தன்னுடைய ராஜினாமா முடிவை முதல்மந்திரி பினராயி விஜயனுக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும் சசீந்திரன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில அரசில் போக்குவரத்து துறை மந்திரியாக பதவி வகிப்பவர் ஏ.கே.சசீந்திரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரான இவர் ஆளும் இடதுசாரி முன்னனி அரசின் கூட்டணியில் உள்ளார். இந்நிலையில், பெண் ஒருவருடன் ஆபாசமாக சசீந்திரன் பேசும் ஆடியோ ஒன்று அங்குள்ள தொலைக்காட்சிகளில் இன்று மதியம் வெளியானது.
இதையடுத்து, உடனே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக சசீந்திரன் அறிவித்தார். மேலும், ”அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக எதிரிகள் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். நான் பேசியதாக வெளியான ஆடியோ முற்றிலும் பொய்யானது. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உடைத்து வெளியே வருவேன்” என கூறியுள்ளார்.
அரசியல் நாகரிகம் கருதியே பதவியை ராஜினாமா செய்வதாகவும், தன்னுடைய ராஜினாமா முடிவை முதல்மந்திரி பினராயி விஜயனுக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும் சசீந்திரன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X