search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி: காணாமல் போன சகோதரிகள் சடலமாக மீட்பு
    X

    உ.பி: காணாமல் போன சகோதரிகள் சடலமாக மீட்பு

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று காணாமல் போன சகோதரிகளான இரண்டு சிறுமிகள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்புர் கேரி மாவட்டத்தில் உள்ள முகம்மாதி கிராமத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேரை நேற்று மாலை முதல் காணவில்லை. சகோதரிகளான இருவரையும் அக்கம் பக்கத்தில் தேடிய குடும்பத்தினர், அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகாரளித்தனர்.

    புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அந்த கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சகோதரிகள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கைப்பற்றப்பட்ட சிறுமிகளின் சடலங்களின் கழுத்துப் பகுதியில் ஆழமான காயம் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், சிறுமிகள் கொலை தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×