என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 20 பேர் காயம்
Byமாலை மலர்25 March 2017 4:22 PM GMT (Updated: 25 March 2017 4:22 PM GMT)
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜபல்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரின் கமாரியா பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு, 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையில், வெடிபொருட்களின் மூலக்கூறுகள், ஹார்டுவேர், ஷெல், துப்பாக்கி தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. வெடிமருந்து நிரப்பும் பணியும் நடைபெறுகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தொழிற்சாலைக்குள் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 50 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
தொழிற்சாலையில் இருந்து 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
வெடி மருந்து நிரப்பும் மையத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதாக கமாரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரின் கமாரியா பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு, 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலையில், வெடிபொருட்களின் மூலக்கூறுகள், ஹார்டுவேர், ஷெல், துப்பாக்கி தோட்டாக்கள் என பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. வெடிமருந்து நிரப்பும் பணியும் நடைபெறுகிறது.
இந்த தொழிற்சாலையில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தொழிற்சாலைக்குள் வேலை பார்த்துக்கொண்டிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 50 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
தொழிற்சாலையில் இருந்து 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
வெடி மருந்து நிரப்பும் மையத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதாக கமாரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X