என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை விரைவில் சீரமையுங்கள்: ராகுலுக்கு திக் விஜய் சிங் வலியுறுத்தல்
Byமாலை மலர்25 March 2017 3:49 PM GMT (Updated: 25 March 2017 3:49 PM GMT)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை உடனடியாக மறுசீரமைப்பு செய்யுங்கள் என்று பொதுச் செயலாளர்களில் ஒருவராக திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைத்தது.
இதனால் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பை உடனடியாக செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திக் விஜய் சிங் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று நடத்துவதற்கான அனைத்து தகுதியும் ராகுலுக்கு உள்ளது. ஆனால், அவர் மீது குற்றம்சாட்டுகிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பிற்கான முயற்சியை அவர் துரிதப்படுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் பார்வை அனைத்தும் அவர் மீது விழுந்துள்ளது. அதனால் மறுசீரமைப்பு முடிவை உடனடியாக எடுக்கவேண்டும். ராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளை சிலர் தடுத்து விடுகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சில கடினமான மறுசீரமைப்பு முடிவை எடுக்க விரும்பினால், அதை அவர் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களை ராகுல் நீக்க விரும்பினால், அவர் என்னை முதல் நபராக நீக்க வேண்டும். ஆனால் அந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். பா.ஜ.க.வை எதிர்த்து செயல்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ்தான். எனவே, அடிமட்டத்தில் இருந்தே முறையாக சீரமைக்கப்பட்டால் மக்கள் ஆதரவு அலை நமக்கு சாதகமாக திரும்பும்” என்றார்.
இதனால் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பை உடனடியாக செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திக் விஜய் சிங் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று நடத்துவதற்கான அனைத்து தகுதியும் ராகுலுக்கு உள்ளது. ஆனால், அவர் மீது குற்றம்சாட்டுகிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பிற்கான முயற்சியை அவர் துரிதப்படுத்தவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் பார்வை அனைத்தும் அவர் மீது விழுந்துள்ளது. அதனால் மறுசீரமைப்பு முடிவை உடனடியாக எடுக்கவேண்டும். ராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளை சிலர் தடுத்து விடுகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சில கடினமான மறுசீரமைப்பு முடிவை எடுக்க விரும்பினால், அதை அவர் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நான் சொல்வேன்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களை ராகுல் நீக்க விரும்பினால், அவர் என்னை முதல் நபராக நீக்க வேண்டும். ஆனால் அந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். பா.ஜ.க.வை எதிர்த்து செயல்படக்கூடிய ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ்தான். எனவே, அடிமட்டத்தில் இருந்தே முறையாக சீரமைக்கப்பட்டால் மக்கள் ஆதரவு அலை நமக்கு சாதகமாக திரும்பும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X