என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து மில்லுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் அம்பேத்கர் நினைவிடம் அமைக்க ஒதுக்கீடு
Byமாலை மலர்25 March 2017 11:58 AM GMT (Updated: 25 March 2017 11:58 AM GMT)
மராட்டிய மாநிலத்தில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இருந்த இந்து மில்லுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலமானது அம்பேத்கர் நினைவிடம் அமைப்பதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலத்தின் மத்திய மும்பை பகுதியில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இந்து மில் செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த மில்லுக்கு சொந்தமான இடத்தில் சட்டமேதை அம்பேத்கர்-க்கு நினைவிடம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து அம்மாநில அரசு முறைப்படி மத்திய ஜவுளித்துறையிடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற ஜவுளித்துறை, இந்து மில் பகுதியில் இருந்த 12 ஏக்கர் நிலத்தை அம்பேத்கர் நினைவிடம் அமைப்பதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று அம்மாநில சட்டசபையில் நடைபெற்றது. அப்போது மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்ருதிமி இராணி நிலத்திற்கான ஆவணங்களை மராட்டிய முதல் மந்திரி தேவேந்திரநாத் பட்நாவிஸ் வசம் ஒப்படைத்தார். இந்நிகழ்சியில் மத்திய சமூக நீதி அமைச்சக இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிலத்திற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்ட பட்நாவிஸ் ,பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஸ்ருதிமி இராணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், மக்கள் மகிழும் வண்ணம் அம்பேத்கர் நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மராட்டிய மாநிலத்தின் மத்திய மும்பை பகுதியில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இந்து மில் செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த மில்லுக்கு சொந்தமான இடத்தில் சட்டமேதை அம்பேத்கர்-க்கு நினைவிடம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து அம்மாநில அரசு முறைப்படி மத்திய ஜவுளித்துறையிடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற ஜவுளித்துறை, இந்து மில் பகுதியில் இருந்த 12 ஏக்கர் நிலத்தை அம்பேத்கர் நினைவிடம் அமைப்பதற்காக மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று அம்மாநில சட்டசபையில் நடைபெற்றது. அப்போது மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்ருதிமி இராணி நிலத்திற்கான ஆவணங்களை மராட்டிய முதல் மந்திரி தேவேந்திரநாத் பட்நாவிஸ் வசம் ஒப்படைத்தார். இந்நிகழ்சியில் மத்திய சமூக நீதி அமைச்சக இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிலத்திற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்ட பட்நாவிஸ் ,பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஸ்ருதிமி இராணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், மக்கள் மகிழும் வண்ணம் அம்பேத்கர் நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X