என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர் இந்தியா மேனேஜருக்கு செருப்படி: சிவசேனா எம்.பி-க்கு சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம்
Byமாலை மலர்24 March 2017 12:15 PM GMT (Updated: 24 March 2017 12:15 PM GMT)
ஏர் இந்தியா மேனேஜரைத் செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி-க்கு, மத்திய சட்டத்தறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இவர், விமானத்தில் உயர் மதிப்பு கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்து இருந்தார். ஆனால், அவருக்கு குறைந்த மதிப்பு கொண்ட எக்கனாமிக் கிளாஸ் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனால் கோபம் அடைந்த ரவீந்திர கெய்க்வாட் டெல்லி சென்றதும் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் சிவக்குமார் நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால், கடும் கோபத்தில் இருந்த ரவீந்திர கெய்க்வாட் மேலாளர் சிவக்குமாரை செருப்பால் பல முறை அடித்தார். மேலும் சட்டையை கிழித்தார். அவரது மூக்கு கண்ணாடியையும் உடைத்து எறிந்தார்.
இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்தது. தொடர்ந்து கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், கெய்க்வாட் விமானத்தில் செல்ல தடைவிதிப்பதாக இந்திய விமான நிறுவன கூட்டமைப்பு கூட்டாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏர் இந்தியா மேனேஜரைத் செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி-க்கு சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் “பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்களிடமிருந்து கண்ணியமான நடத்தையை இந்த நாடு எதிர்பார்க்கிறது. நேற்று டெல்லி விமான நிலையத்தில் எம்.பி நடந்து கொண்ட விதம் மிகவும் வேதனையளித்தது” என்றார்.
ரவீந்திர கெய்க்வாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் ரவிசங்கர் பிரசாத் டுவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். இவர், விமானத்தில் உயர் மதிப்பு கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்து இருந்தார். ஆனால், அவருக்கு குறைந்த மதிப்பு கொண்ட எக்கனாமிக் கிளாஸ் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனால் கோபம் அடைந்த ரவீந்திர கெய்க்வாட் டெல்லி சென்றதும் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் சிவக்குமார் நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால், கடும் கோபத்தில் இருந்த ரவீந்திர கெய்க்வாட் மேலாளர் சிவக்குமாரை செருப்பால் பல முறை அடித்தார். மேலும் சட்டையை கிழித்தார். அவரது மூக்கு கண்ணாடியையும் உடைத்து எறிந்தார்.
இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்தது. தொடர்ந்து கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், கெய்க்வாட் விமானத்தில் செல்ல தடைவிதிப்பதாக இந்திய விமான நிறுவன கூட்டமைப்பு கூட்டாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏர் இந்தியா மேனேஜரைத் செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி-க்கு சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் “பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்களிடமிருந்து கண்ணியமான நடத்தையை இந்த நாடு எதிர்பார்க்கிறது. நேற்று டெல்லி விமான நிலையத்தில் எம்.பி நடந்து கொண்ட விதம் மிகவும் வேதனையளித்தது” என்றார்.
ரவீந்திர கெய்க்வாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் ரவிசங்கர் பிரசாத் டுவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X