என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணிக்கு திரும்பாத மகாராஷ்டிரா மருத்துவர்களுக்கு மும்பை ஐகோர்ட் கடும் கண்டனம்
Byமாலை மலர்24 March 2017 10:41 AM GMT (Updated: 24 March 2017 10:41 AM GMT)
மகாராஷ்டிராவில் பணிக்கு திரும்பாமல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அம்மாநில மும்பை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் துலே என்ற இடத்தில் நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு பணியிலிருந்த மருத்துவரை கடுமையாக தாக்கினர். இதில் மருத்துவர் படுகாயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சக மருத்துவர்கள், மற்றும் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் கடந்த 4 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், உரிய பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மருத்துவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போராடும் மருத்துவர் பணிக்குத் திரும்பவேண்டும் என ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும்
வரை போராட்டம் தொடரும் என்று கூறிய மருத்துவர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் அறிவுரைக்கு மதிப்பளித்து பணிக்கு திரும்பாமல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு அம்மாநில ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் “வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மாலை 3 மணிக்குள் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி 3 மணிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கண்டன நடவடிக்கைகள் தொடங்கும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான மும்பை மாநகராட்சி கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், சியான் மருத்துவமனையில் நேற்று 38 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பிரதிநிதிகளுடன் மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் துலே என்ற இடத்தில் நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு பணியிலிருந்த மருத்துவரை கடுமையாக தாக்கினர். இதில் மருத்துவர் படுகாயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சக மருத்துவர்கள், மற்றும் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் கடந்த 4 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், உரிய பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மருத்துவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போராடும் மருத்துவர் பணிக்குத் திரும்பவேண்டும் என ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும்
வரை போராட்டம் தொடரும் என்று கூறிய மருத்துவர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் அறிவுரைக்கு மதிப்பளித்து பணிக்கு திரும்பாமல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு அம்மாநில ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் “வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என மாலை 3 மணிக்குள் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி 3 மணிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கண்டன நடவடிக்கைகள் தொடங்கும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான மும்பை மாநகராட்சி கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், சியான் மருத்துவமனையில் நேற்று 38 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பிரதிநிதிகளுடன் மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X