search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
    X

    மகாராஷ்டிராவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

    மகாராஷ்டிராவில் சக பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் துலே என்ற இடத்தில் நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கு பணியிலிருந்த மருத்துவரை கடுமையாக தாக்கினர். இதில் மருத்துவர் படுகாயமடைந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சக மருத்துவர்கள், தாக்கப்பட்டதைக் கண்டித்தும், உரிய பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்  மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் கடந்த 4 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்களும் ஈடுபட்டு வந்தனர்.

    மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மருத்துவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவர்கள் போராட்டத்தை உடனே கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும், மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது.

    இந்நிலையில், 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.



    இது தொடர்பாக மகாராஷ்டிரா பயிற்சி மருத்துவர்கள் சங்க தலைவர் யஷோவர்தன் கப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் மும்பை ஐகோர்ட் கடுமையாக பரிந்துரைகளை முன் வைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற மருத்துவர்களை கைவிட்டு  பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×