என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாய்மரப் படகில் உலகம் சுற்றி சாதனை படைக்க இருக்கும் இந்திய கடற்படை பெண்கள்
Byமாலை மலர்23 March 2017 7:38 PM GMT (Updated: 23 March 2017 7:38 PM GMT)
இந்திய கடற்படையில் பணியாற்றும் பெண்களில் ஒரு குழுவினர் பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கின்றனர்.
மும்பை:
இந்திய கடற்படையில் பணியாற்றும் பெண்களில் ஒரு குழுவினர் பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கின்றனர்.
இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர். அதே போல் இந்த ஆண்டும் கடற்படை பெண்கள் பிரிவில் ஒரு குழுவினர் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இருப்பதாகவும், மற்றொரு குழுவினர் பாய்மரப்படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வர இருக்கின்றனர்.
6 பெண்கள் கொண்ட குழுவினர் இந்த சாகச பயணத்தில் ஈடுபட இருக்கின்றனர். வரும் ஜூன் மாதத்தில் கடற்பகுதியில் காற்று வீசுவது சீராக இருக்கும் எனவும், இந்த பயணத்தை அவர்கள் மூன்று மாதங்களில் நிறைவு செய்ய இருப்பதாகவும் கடற்படை துணை தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்தாண்டு இதேபோல உலகின் முக்கிய கடற்படை தளங்களை பாய்மரப்படகில் பெண்கள் குழுவினர் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படையில் பணியாற்றும் பெண்களில் ஒரு குழுவினர் பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கின்றனர்.
இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக வருடம் தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர். அதே போல் இந்த ஆண்டும் கடற்படை பெண்கள் பிரிவில் ஒரு குழுவினர் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இருப்பதாகவும், மற்றொரு குழுவினர் பாய்மரப்படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வர இருக்கின்றனர்.
6 பெண்கள் கொண்ட குழுவினர் இந்த சாகச பயணத்தில் ஈடுபட இருக்கின்றனர். வரும் ஜூன் மாதத்தில் கடற்பகுதியில் காற்று வீசுவது சீராக இருக்கும் எனவும், இந்த பயணத்தை அவர்கள் மூன்று மாதங்களில் நிறைவு செய்ய இருப்பதாகவும் கடற்படை துணை தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்தாண்டு இதேபோல உலகின் முக்கிய கடற்படை தளங்களை பாய்மரப்படகில் பெண்கள் குழுவினர் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X