என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துடைப்பம் எடுத்து ஆபீசை சுத்தம் செய்த உ.பி. மந்திரி
Byமாலை மலர்23 March 2017 4:18 PM GMT (Updated: 23 March 2017 4:18 PM GMT)
உத்தர பிரதேச மாநிலத்தில் மந்திரி ஒருவர் துடைப்பம் எடுத்து தனது அலுவலகத்தை சுத்தம் செய்த தகவல் மற்றும் அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், தலைமைச் செயலக வளாகத்தை பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் சந்தித்தார்.
அப்போது, அரசு அலுவலகங்களில் சில இடங்களில் வெற்றிலைக் கறைகள் படிந்திருப்பதை கண்ட முதலமைச்சர் ஆதித்யநாத், அரசு அலுவலகங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறியதுடன், பணியில் இருக்கும்போது பான் மசாலா போன்ற வாயில் மெல்லும் போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரி உபேந்திர திவாரி இன்று, சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்ததும், துடைப்பத்தை எடுத்து பெருக்கி, பின்னர் மாப் கொண்டு துடைத்துவிட்டார். அலுவலகத்திற்கு வெளியில் உள்ள பகுதியையும் சுத்தம் செய்தார்.
அவர் சுத்தம் செய்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத், தலைமைச் செயலக வளாகத்தை பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் சந்தித்தார்.
அப்போது, அரசு அலுவலகங்களில் சில இடங்களில் வெற்றிலைக் கறைகள் படிந்திருப்பதை கண்ட முதலமைச்சர் ஆதித்யநாத், அரசு அலுவலகங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என்று கூறியதுடன், பணியில் இருக்கும்போது பான் மசாலா போன்ற வாயில் மெல்லும் போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரி உபேந்திர திவாரி இன்று, சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்ததும், துடைப்பத்தை எடுத்து பெருக்கி, பின்னர் மாப் கொண்டு துடைத்துவிட்டார். அலுவலகத்திற்கு வெளியில் உள்ள பகுதியையும் சுத்தம் செய்தார்.
அவர் சுத்தம் செய்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X