என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி
Byமாலை மலர்23 March 2017 3:14 PM GMT (Updated: 23 March 2017 3:14 PM GMT)
தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கும், நிலத்தடி நீர் குறைந்து உப்பு நீர் உட்புகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு 2013ம் ஆண்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு தமிழக அரசு நிரந்தர தடை விதித்தது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியும் கூறியிருந்தார்.
இந்நிலையில், புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நிபுணர் குழு கூடி விவாதித்து, திருத்தப்பட்ட படிவத்தை ஏற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் மீத்தேன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கும், நிலத்தடி நீர் குறைந்து உப்பு நீர் உட்புகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக, இந்த திட்டத்திற்கு 2013ம் ஆண்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு தமிழக அரசு நிரந்தர தடை விதித்தது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியும் கூறியிருந்தார்.
இந்நிலையில், புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நிபுணர் குழு கூடி விவாதித்து, திருத்தப்பட்ட படிவத்தை ஏற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் மீத்தேன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X