search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லேப்டாப் தடையால் தங்கள் விமான போக்குவரத்து அதிகரிக்கும்: ஏர் இந்தியா நம்பிக்கை
    X

    லேப்டாப் தடையால் தங்கள் விமான போக்குவரத்து அதிகரிக்கும்: ஏர் இந்தியா நம்பிக்கை

    விமானங்களில் லேப்டாப் எடுத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையால் தங்களது விமான போக்குவரத்து அதிகரிக்கும் என்று ஏர் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு  தடை விதித்துள்ளது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    வளைகுடா நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு துருக்கி அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா அரசு அறிவித்துள்ள இதே திட்டத்தை பிரிட்டன் அரசும் அமல்படுத்தி உள்ளது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், விமானங்களில் லேப்டாப் எடுத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையால் தங்களது விமான போக்குவரத்து அதிகரிக்கும் என்று ஏர் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிதாக அமெரிக்காவிற்கு நேரடி விமான போக்குவரத்து வருவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நிவர்க் ஆகிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து இயங்கி வருகிறது.
    Next Story
    ×