என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்வானிக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்23 March 2017 6:28 AM GMT (Updated: 23 March 2017 6:28 AM GMT)
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கு கடந்த மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்கும்படி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை விடுவிக்கும்படி வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணையை மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதேசமயம், கூட்டுச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு
ஒத்திவைத்து, நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
மேலும், வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இவ்வழக்கு கடந்த மார்ச் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்கும்படி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை விடுவிக்கும்படி வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணையை மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதேசமயம், கூட்டுச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு
ஒத்திவைத்து, நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
மேலும், வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X