என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் கமிஷன் ஆதரவு
Byமாலை மலர்20 March 2017 8:47 PM GMT (Updated: 20 March 2017 8:47 PM GMT)
சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:
சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசியல்வாதிகள் தீவிரமான குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க் களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது அமலில் உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது. தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜெ.எம். லிங்டோ, மக்கள் நல அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆகியோர் சார்பிலும் இதேபோன்ற மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி தேர்தல் கமிஷன் தனது பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிவுக்கு கொண்டுவருவதற்கும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரணை நடத்துவதற்கான அமர்வு இன்னும் அமைக்கப்படவில்லை. அமர்வு அமைக்கப்பட்டதும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கு தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசியல்வாதிகள் தீவிரமான குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க் களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது அமலில் உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது. தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜெ.எம். லிங்டோ, மக்கள் நல அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆகியோர் சார்பிலும் இதேபோன்ற மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி தேர்தல் கமிஷன் தனது பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிவுக்கு கொண்டுவருவதற்கும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரணை நடத்துவதற்கான அமர்வு இன்னும் அமைக்கப்படவில்லை. அமர்வு அமைக்கப்பட்டதும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X