என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு - 2 நாட்களில் நீதிமன்றத்திற்கு செல்வேன்: மாயாவதி பேட்டி
Byமாலை மலர்20 March 2017 10:15 AM GMT (Updated: 20 March 2017 10:54 AM GMT)
உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்கள் தொடர்பாக இன்னும் 2-3 நாட்களில் நீதிமன்றத்தை அணுகப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் வெறும் 19 இடங்களை மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. கடந்த சட்டப் பேரவையில் மாயாவதியின் கட்சி 80 எம்.எல்.ஏ.க்களை தன் வசம் வைத்திருந்தது.
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 325 இடங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் வெறும் 19 இடங்களை மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. கடந்த சட்டப் பேரவையில் மாயாவதியின் கட்சி 80 எம்.எல்.ஏ.க்களை தன் வசம் வைத்திருந்தது.
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 325 இடங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X