search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் புதிதாக தேர்வான எம்.எல்,ஏ-க்கள் வாக்காளர்களுடன் உற்சாக ஹோலி கொண்டாட்டம்
    X

    உ.பி.யில் புதிதாக தேர்வான எம்.எல்,ஏ-க்கள் வாக்காளர்களுடன் உற்சாக ஹோலி கொண்டாட்டம்

    உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுடன் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. 312 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பாண்மையுடன் ஆட்சியமைக்க இருக்கின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் இரட்டை உற்சாகத்துடன் ஹோலியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    வாத்தியக் கருவிகளை இசைத்தும், வண்ணப் பொடிகளை தூவியும் வெகு விமர்சையாக ஹோலி பண்டிகையை எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதிகளில் உள்ள பொது மக்களுடன் கொண்டாடினர். எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய தொகுதிகளில் உள்ள மக்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.



    உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தோல்வியுற்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது குடும்பத்தினருடன் ஹோலியை கொண்டாடினார். மேலும், அம்மாநில ஆளுநர் ராம் நாயக் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்திருந்தார். 
    Next Story
    ×