என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
Byமாலை மலர்10 March 2017 1:00 AM GMT (Updated: 10 March 2017 1:00 AM GMT)
நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில், ஏப்ரல் 9 மற்றும் 12-ந் தேதிகளில் 2 கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். அங்கு ஏப்ரல் 15-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 17-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
டெல்லி, அசாம், இமாசலபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சிக்கிம் மாநிலத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதியில் ஏப்ரல் 12-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்று, ஏப்ரல் 15-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.
இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில், ஏப்ரல் 9 மற்றும் 12-ந் தேதிகளில் 2 கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். அங்கு ஏப்ரல் 15-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 17-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
டெல்லி, அசாம், இமாசலபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சிக்கிம் மாநிலத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதியில் ஏப்ரல் 12-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்று, ஏப்ரல் 15-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.
இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X