என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்
Byமாலை மலர்1 March 2017 2:44 PM GMT (Updated: 1 March 2017 2:44 PM GMT)
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவின் கென்சாஸ் நகரில் கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸ் என்பவர், அமெரிக்காவைச் சேர்ந்த நபரால் இனவெறியுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் மற்ற இந்தியர்களை பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிரம்பின் கண்டனத்தையடுத்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே, “கென்சாஸ் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க மூத்த அதிகாரிகள், இது போல சம்பவங்கள் இனியும் நடைபெறாது என உறுதியாக தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். மற்ற நாடுகளின் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கென்சாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசிய டிரம்ப், “பெருமதிப்பிற்குரிய இந்த பாராளுமன்றத்தில் இருந்தவாறு இதை போன்ற வெறுப்புணர்வு சார்ந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கென்சாஸ் நகரில் கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸ் என்பவர், அமெரிக்காவைச் சேர்ந்த நபரால் இனவெறியுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் மற்ற இந்தியர்களை பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிரம்பின் கண்டனத்தையடுத்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே, “கென்சாஸ் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க மூத்த அதிகாரிகள், இது போல சம்பவங்கள் இனியும் நடைபெறாது என உறுதியாக தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். மற்ற நாடுகளின் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கென்சாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசிய டிரம்ப், “பெருமதிப்பிற்குரிய இந்த பாராளுமன்றத்தில் இருந்தவாறு இதை போன்ற வெறுப்புணர்வு சார்ந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X