என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு இல்லை - சக்திகாந்த தாஸ்
Byமாலை மலர்28 Feb 2017 4:07 PM GMT (Updated: 28 Feb 2017 4:07 PM GMT)
மக்கள் நினைத்தது போல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசால் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% ஆக இருந்ததாக மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. மேலும், 2015-16-ம் ஆண்டில் 7.9% மொத்த உள்நாட்டு உற்பத்தி இருந்ததாகவும், 2016-17-ம் ஆண்டில் 7.1% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், “மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு செய்த காலக்கட்டத்தில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு வந்துவிடுமோ என மக்கள் அச்சப்பட்டனர். ஆனால், 7% மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாம் அடைந்துள்ளோம்” எனக் கூறினார்.
ஏ.டி.எம்-களில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தாஸ், “அச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால் நான் கருத்துகள் எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசால் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% ஆக இருந்ததாக மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. மேலும், 2015-16-ம் ஆண்டில் 7.9% மொத்த உள்நாட்டு உற்பத்தி இருந்ததாகவும், 2016-17-ம் ஆண்டில் 7.1% ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், “மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணமதிப்பிழப்பு செய்த காலக்கட்டத்தில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு வந்துவிடுமோ என மக்கள் அச்சப்பட்டனர். ஆனால், 7% மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாம் அடைந்துள்ளோம்” எனக் கூறினார்.
ஏ.டி.எம்-களில் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தாஸ், “அச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால் நான் கருத்துகள் எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X