என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-1 மாணவியை கற்பழித்த பாதிரியார் கைது
Byமாலை மலர்28 Feb 2017 1:24 PM GMT (Updated: 28 Feb 2017 1:24 PM GMT)
பிளஸ்-1 மாணவியை கற்பழித்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பாதிரியாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் வடக்கஞ்சேரியில் உள்ள ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கஞ்சேரி.
இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியின் மேலாளராகவும் இருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுபற்றி மாணவியின் தாயார் ஆலய நிர்வாகத்திடம் புகார் செய்தார். மேலும் குழந்தைகள் நல வாரியத் திடமும் புகார் மனு கொடுத்தார். அவர்கள் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே பாதிரியாரால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி, பிரசவத்திற்காக கூத்தபரம்பில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
20 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மைனர் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். பரவூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவியின் கர்ப்பத்திற்கு பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரியே காரணம் என தெரிய வந்தது.
அவரை போலீசார் தேடிச் சென்றனர். அப்போது அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் வடக்கஞ்சேரியில் உள்ள ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கஞ்சேரி.
இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியின் மேலாளராகவும் இருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுபற்றி மாணவியின் தாயார் ஆலய நிர்வாகத்திடம் புகார் செய்தார். மேலும் குழந்தைகள் நல வாரியத் திடமும் புகார் மனு கொடுத்தார். அவர்கள் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே பாதிரியாரால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி, பிரசவத்திற்காக கூத்தபரம்பில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
20 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மைனர் பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். பரவூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் மாணவியின் கர்ப்பத்திற்கு பாதிரியார் ராபின் வடக்கஞ்சேரியே காரணம் என தெரிய வந்தது.
அவரை போலீசார் தேடிச் சென்றனர். அப்போது அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X