search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
    X

    சாலை விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

    மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கணவன் மனைவி மற்றும் அவர்களது 4 வயது குழந்தை ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு தாண்ட்லா - பட்னாவர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பேருகாட் என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருக்கும் போது சாலையின் ஓரத்தில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால், மூவரும் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×