என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நண்பர் வீட்டுக்கு சென்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல்
Byமாலை மலர்27 Feb 2017 5:06 AM GMT (Updated: 27 Feb 2017 5:06 AM GMT)
டெல்லியில் நண்பர் வீட்டுக்கு சென்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் 23 வயது மாணவி ஒருவர் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் படித்த கவுரவ், சன்னி ஆகிய 2 மாணவர்கள் பரிதாபாத்தில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுக்கு வருமாறு மாணவியை அழைத்தனர். எனவே அவர் அங்கு சென்றார்.
அப்போது அந்த மாணவர்களின் மேலும் 3 நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். பின்னர் அந்த மாணவியை காரில் ஏற்றிவந்து டெல்லியில் விட்டு சென்றனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவி பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறினார்.
இதைத்தொடர்ந்து டெல்லி ராஜ்பத் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறப்பட்டது. போலீசார் அந்த மாணவியிடம் விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுரவ், சன்னி, அவர்களது நண்பர்கள் ரோக்தஸ், பன்டிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நண்பர் சச்சின் என்பவரை தேடிவருகிறார்கள்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் 23 வயது மாணவி ஒருவர் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் படித்த கவுரவ், சன்னி ஆகிய 2 மாணவர்கள் பரிதாபாத்தில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுக்கு வருமாறு மாணவியை அழைத்தனர். எனவே அவர் அங்கு சென்றார்.
அப்போது அந்த மாணவர்களின் மேலும் 3 நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். பின்னர் அந்த மாணவியை காரில் ஏற்றிவந்து டெல்லியில் விட்டு சென்றனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவி பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறினார்.
இதைத்தொடர்ந்து டெல்லி ராஜ்பத் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறப்பட்டது. போலீசார் அந்த மாணவியிடம் விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கவுரவ், சன்னி, அவர்களது நண்பர்கள் ரோக்தஸ், பன்டிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு நண்பர் சச்சின் என்பவரை தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X