என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்கத்தா அமெரிக்க மைய தாக்குதல் முக்கிய குற்றவாளி கைது
Byமாலை மலர்26 Feb 2017 12:18 AM GMT (Updated: 26 Feb 2017 12:18 AM GMT)
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மைய தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப்பின் பீகாரில் கைது செய்யப்பட்டான்.
கயா:
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்துக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சில பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 6 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாதிகள் பின்னர் அதே ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் மற்றொரு குற்றவாளியான முகமது சர்வார் தப்பி ஓடினார். அவரை தேடும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டிருந்தனர்.
இந்தநிலையில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்துக்கு உட்பட்ட நீம்சக் பகுதியில் மறைந்திருந்த முகமது சர்வாரை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநில போலீசார் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். 15 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்துக்கு கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சில பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 6 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாதிகள் பின்னர் அதே ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் மற்றொரு குற்றவாளியான முகமது சர்வார் தப்பி ஓடினார். அவரை தேடும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டிருந்தனர்.
இந்தநிலையில் பீகார் மாநிலம் கயா மாவட்டத்துக்கு உட்பட்ட நீம்சக் பகுதியில் மறைந்திருந்த முகமது சர்வாரை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநில போலீசார் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். 15 ஆண்டுகளுக்குப்பின் சிக்கிய அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X