என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமரின் அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர் - வெங்கையா நாயுடு
Byமாலை மலர்25 Feb 2017 10:22 AM GMT (Updated: 25 Feb 2017 10:22 AM GMT)
புழக்கத்திலிருந்த 1000, 500 ரூபாய் நோட்டுக்களை ஒழித்தது உள்ளிட்ட பிரதமரின் அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர் என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஐதராபாத்:
சமீபத்தில் மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
புழக்கத்திலிருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர். சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. எதிர்க்கட்சியினர்தான் அடிப்படை உண்மைகள் தெரியாமல் பேசி வருகின்றனர்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் கட்சி பேசி வருகின்றது. இது அப்பகுதியில் தீவிரவாதம் வளரவே உதவும். 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என மக்களிடம் எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
சமீபத்தில் மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
புழக்கத்திலிருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர். சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. எதிர்க்கட்சியினர்தான் அடிப்படை உண்மைகள் தெரியாமல் பேசி வருகின்றனர்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் கட்சி பேசி வருகின்றது. இது அப்பகுதியில் தீவிரவாதம் வளரவே உதவும். 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என மக்களிடம் எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X