என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பதி கோவிலுக்கு ரூ. 5 கோடி காணிக்கை: சந்திரசேகர் ராவுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு
நகரி:
தெலுங்கானா தனி மாநிலம் உருவானால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடி நகை காணிக்கை தருவதாக தெலுங்கானா ராஷ் டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டிக் கொண்டார்.
தெலுங்கானா மாநி லம் உருவாகி முதல்- மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்றதும் அரசு சார்பில் திருப்பதி ஏழுமலையான் நகை காணிக்கைக்கு ரூ. 5 கோடியை ஒதுக்கீடு செய்தார். அந்த நகைகளை சமீபத்தில் திருப்பதியில் காணிக்கையாக செலுத்தினார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி கூறியதாவது:-
முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சொந்த வேண்டுதல்களை மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்றி வருகிறார்.
பொது பணத்தில் இருந்து பழுதடைந்த கோவில்களை புதுப்பிக்கவும், வருமானம் இல்லாத கோவிலுக்கும் நிதி கொடுக்க வேண்டும்.
ஆனால் பணக்கார கோவிலான திருப்பதிக்கு ரூ. 5 கோடி நகை காணிக்கை கொடுத்து உள்ளார். இது சட்டவிரோதம். மக்கள் பணத்தை சந்திரசேகர ராவ் சொந்த வேண்டுதலுக்காக செலவு செய்ததை எதிர்த்து ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.
இதேபோல கம்யூனிஸ்டு தலைவர் சாந்தவெங்கட் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்