search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் சட்டமன்றம் நாளை கூடுகிறது: மார்ச் 3-ல் பட்ஜெட் தாக்கல்
    X

    கேரளாவில் சட்டமன்றம் நாளை கூடுகிறது: மார்ச் 3-ல் பட்ஜெட் தாக்கல்

    கேரளாவில் நாளை ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. மார்ச் 3-ம்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 14-வது சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதுபற்றி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



    கேரள சட்டமன்றக் கூட்டம் நாளை தொடங்குகிறது. முதல் நாளில் ஆளுநர் உரையாற்றுகிறார். மார்ச் 3-ம் தேதி 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி தாமஸ் ஐசக் தாக்கல் செய்கிறார். பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.



    இந்த கூட்டத்தொடரில், பாலக்காட்டில் கோக கோலா நிறுவனம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, தேவையான மாற்றங்களுடன் மறு அறிமுகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னணி நடிகை காருக்குள் சில இளைஞர்களால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம், வறட்சி நிலை, ரேசன் கடைகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 நாட்கள் வரை நடைபெறும் இக்கூட்டத்தொடர் மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
    Next Story
    ×