என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம்: மாணவியின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவிய வாலிபர்
Byமாலை மலர்22 Feb 2017 8:40 AM GMT (Updated: 22 Feb 2017 10:52 AM GMT)
கல்லூரி சென்று திரும்பிய மாணவியின் கண்களில், இளைஞர் மிளகாய்ப்பொடி தூவிய சம்பவம் உத்தர பிரதேச மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் பண்டு (22). இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து பண்டு அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக அப்பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்னர் இதேபோல பண்டு அப்பெண்ணின் மீது மிளகாய்ப்பொடி கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து பண்டுவை ஜெயிலுக்கு அனுப்பியதாகவும் அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கூறுகையில் "3 மாதங்களுக்கு முன்னர் அவனை கடுமையாகத் தண்டிக்கவில்லை. அதனால் தான் அவன் திரும்ப இதுபோல செய்துள்ளான்'' என போலீஸ் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், பண்டு மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட பிஜ்னோர் நகர தலைமை காவல் அதிகாரி சைலேந்திர பிரதாப் கவுதம் "பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தால் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
3 மாதங்களில் இரண்டுமுறை மாணவி மீது மிளகாய்ப்பொடி தாக்குதல் நடத்திய சம்பவம், பிஜ்னோர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் பண்டு (22). இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து பண்டு அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக அப்பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்னர் இதேபோல பண்டு அப்பெண்ணின் மீது மிளகாய்ப்பொடி கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து பண்டுவை ஜெயிலுக்கு அனுப்பியதாகவும் அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கூறுகையில் "3 மாதங்களுக்கு முன்னர் அவனை கடுமையாகத் தண்டிக்கவில்லை. அதனால் தான் அவன் திரும்ப இதுபோல செய்துள்ளான்'' என போலீஸ் மீது குற்றஞ்சாட்டினர். மேலும், பண்டு மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட பிஜ்னோர் நகர தலைமை காவல் அதிகாரி சைலேந்திர பிரதாப் கவுதம் "பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தால் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
3 மாதங்களில் இரண்டுமுறை மாணவி மீது மிளகாய்ப்பொடி தாக்குதல் நடத்திய சம்பவம், பிஜ்னோர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X