search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மராட்டியம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கிவிட்டது. டெல்லியில் 93 டிகிரிக்கு அதிகமான வெப்பம் இருக்கிறது.

    பிப்ரவரி மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு தற்போது வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் தான் இது மாதிரியான வெயில் இருந்தது.



    இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×