search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா கட்சியினருக்கு பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள்: சித்தராமையா
    X

    பா.ஜனதா கட்சியினருக்கு பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள்: சித்தராமையா

    பா.ஜனதா கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருக்கும் பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா கதக் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்ததாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த விவகாரத்தில் பா.ஜனதா கட்சி தலைவர்கள் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள்.

    இது தொடர்பாக பா.ஜனதா கட்சியினர் ஏதாவது போராட்டம் நடத்தினால், அந்தக் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி அஞ்சுவதில்லை. பா.ஜனதா கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட 10 மடங்கு தொண்டர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள்.

    பா.ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கும், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் இடையிலான அரசியல் சண்டை உலகம் அறிந்தது. எது எப்படி இருந்தாலும், அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. பொய் சொல்வதில் பா.ஜனதா கட்சியினருக்கு நிகர் பா.ஜனதா கட்சியினர் தான். அந்தக் கட்சியின் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருக்கும் பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×