என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா கட்சியினருக்கு பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள்: சித்தராமையா
Byமாலை மலர்20 Feb 2017 6:46 AM GMT (Updated: 20 Feb 2017 6:46 AM GMT)
பா.ஜனதா கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருக்கும் பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா கதக் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்ததாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த விவகாரத்தில் பா.ஜனதா கட்சி தலைவர்கள் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக பா.ஜனதா கட்சியினர் ஏதாவது போராட்டம் நடத்தினால், அந்தக் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி அஞ்சுவதில்லை. பா.ஜனதா கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட 10 மடங்கு தொண்டர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள்.
பா.ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கும், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் இடையிலான அரசியல் சண்டை உலகம் அறிந்தது. எது எப்படி இருந்தாலும், அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. பொய் சொல்வதில் பா.ஜனதா கட்சியினருக்கு நிகர் பா.ஜனதா கட்சியினர் தான். அந்தக் கட்சியின் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருக்கும் பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா கதக் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு ரூ.1,000 கோடி கொடுத்ததாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த விவகாரத்தில் பா.ஜனதா கட்சி தலைவர்கள் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக பா.ஜனதா கட்சியினர் ஏதாவது போராட்டம் நடத்தினால், அந்தக் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி அஞ்சுவதில்லை. பா.ஜனதா கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட 10 மடங்கு தொண்டர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள்.
பா.ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கும், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் இடையிலான அரசியல் சண்டை உலகம் அறிந்தது. எது எப்படி இருந்தாலும், அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. பொய் சொல்வதில் பா.ஜனதா கட்சியினருக்கு நிகர் பா.ஜனதா கட்சியினர் தான். அந்தக் கட்சியின் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருக்கும் பொய் சொல்ல பயிற்சி அளிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X