என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி: மே மாதம் அறிமுகம்
Byமாலை மலர்19 Feb 2017 6:31 PM GMT (Updated: 19 Feb 2017 6:31 PM GMT)
வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை மேற்கொள்ள இ.பி.எப்.ஓ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி:
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சுமார் 1 கோடி விண்ணப்பங்கள் வரை தற்போது வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு (இ.பி.எப்.ஓ.) வந்துள்ளன. இதனால் இந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த காலவிரயத்தை தடுக்க வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை மேற்கொள்ள இ.பி.எப்.ஓ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இ.பி.எப்.ஓ.வின் அனைத்து துறை அலுவலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்படும் என இ.பி.எப்.ஓ. அதிகாரி வி.பி.ஜாய் தெரிவித்தார். வருங்கால வைப்புநிதியை கேட்டு ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு காண இ.பி.எப்.ஓ. திட்டமிட்டு உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சுமார் 1 கோடி விண்ணப்பங்கள் வரை தற்போது வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு (இ.பி.எப்.ஓ.) வந்துள்ளன. இதனால் இந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த காலவிரயத்தை தடுக்க வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை மேற்கொள்ள இ.பி.எப்.ஓ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இ.பி.எப்.ஓ.வின் அனைத்து துறை அலுவலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்படும் என இ.பி.எப்.ஓ. அதிகாரி வி.பி.ஜாய் தெரிவித்தார். வருங்கால வைப்புநிதியை கேட்டு ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு காண இ.பி.எப்.ஓ. திட்டமிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X