search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவில் 61 சதவீதம் வாக்குகள் பதிவு
    X

    உ.பி. சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவில் 61 சதவீதம் வாக்குகள் பதிவு

    உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலில் 61.16 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் கடந்த 11, 15-ந்தேதிகளில் 2 கட்டதேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    3-வது கட்டமாக 69 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெரும்பாலான தொகுதிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இன்றைய தேர்தலில் மொத்தம் 2.41 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளிலும் 16,671 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சாய்பாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

    இந்நிலையில், 3-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 61.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 சட்டசபை தேர்தலை விட தற்போது 2 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது.

    அனைத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×