search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு: வெங்கையா நாயுடு
    X

    தமிழக சட்டசபை நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு: வெங்கையா நாயுடு

    தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழக்கு ஏற்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட ரகளையின் காரணமாக சட்டசபை போர்க்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றிய பின் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தமிழக  சட்டசபையில் நேற்று நடந்தது குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகளால் ஜனநாயகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×