search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும்: மத்திய அரசு
    X

    நீட் தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும்: மத்திய அரசு

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) இந்த ஆண்டு மே 7-ந் தேதி நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. இத்தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 25 என்று மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

    இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு அளிக்கப்படும். எனவே, அவர்களுக்கான வயது வரம்பு 30 ஆகும். ஆனால், அனைத்து பிரிவினரும் அதிகபட்சம் 3 தடவை மட்டுமே தேர்வு எழுத முடியும்.

    இந்த ஆண்டு எழுதும் தேர்வுதான், முதல் தடவையாக கணக்கில் கொள்ளப்படும். இதற்கு முன்பு எழுதப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதால், அத்தேர்வுகளில் பங்கேற்றவர்களும் இனிமேல் 3 தடவை தேர்வு எழுதலாம். 
    Next Story
    ×