என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்கம்; பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்22 Jan 2017 12:49 PM GMT (Updated: 22 Jan 2017 12:49 PM GMT)
மேற்கு வங்கம் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்கத்தா;
மேற்கு வங்கம் மாநிலம் பிபும் மாவட்டத்தில் இல்லம்பசார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று அதிக வேகத்தில் வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி, சாலையின் அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலிருந்த துர்காபுர் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை துர்காபுர் மற்றும் போல்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X