search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படை வாகனம் மீது அசாம் போராளிகள் திடீர் தாக்குதல் - துப்பாக்கிச் சண்டை
    X

    பாதுகாப்பு படை வாகனம் மீது அசாம் போராளிகள் திடீர் தாக்குதல் - துப்பாக்கிச் சண்டை

    அசாம் மாநிலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வாகனம் மீது இன்று கையெறி குண்டுகளை வீசி போராளிகள் தாக்கியதால் அங்கு இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
    கவுகாத்தி:

    அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் போடோ மற்றும் உல்பா உள்ளிட்ட போராளி குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த அசாம் மற்றும் அருணாசலப்பிரதேசம் மாநில எல்லைப்பகுதியான துன்சுக்யா மாவட்டம், பராபச்தி நெடுஞ்சாலை வழியாக இன்று காலை வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்கு மறைந்திருந்த போராளிகள் ரோந்து வாகனங்களின்மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், நிலைகுலைந்த அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் வாகனங்களை விட்டு இறங்கி போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×