search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 12 பேர் பலி
    X

    ஒடிசாவில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 12 பேர் பலி

    ஒடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒடிசா மாநிலம் குலோரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் ராஜகாடா அருகே ஜக்தல்பூர்-புவனேஷ்வர் இடையே செல்லும் ஹிராக்கந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது 12 பேர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ராஜகாடா மற்றும் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகள் செய்ய விரைந்துள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட மொத்த சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×