search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா: பா.ஜ.க. பிரமுகர் கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது
    X

    கேரளா: பா.ஜ.க. பிரமுகர் கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது

    கேரளா மாநிலத்தில் பா.ஜ.க. தொண்டர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தர்மடம் அருகே உள்ள அண்டலூரைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர் சந்தோஷ் என்பவர் கடந்த 18-ம் தேதி தனது வீட்டில் வைத்து மர்ப நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். 

    சந்தோஷை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தி வந்தது. மேலும், அம்மாநில பா.ஜ.க தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் சந்தோஷை கொலை செய்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சந்தோஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்டலூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் 6 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில்  சுற்றுலா சென்ற மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினரை வழிமறித்து தாக்கியதாகவும். அதற்குப் பதிலடியாக சந்தோஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, சந்தோஷ் அவரது உறவினர்களால் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×