என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரம் பாதுகாக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
Byமாலை மலர்21 Jan 2017 4:48 AM GMT (Updated: 21 Jan 2017 4:48 AM GMT)
தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரத்தை எண்ணி பெருமைப்படுவதாக இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:
தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரத்தை எண்ணி பெருமைப்படுவதாக இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கலை யொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
வளர்ச்சியில் புதிய உச்சங்களை அடைய தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழர்களின் பண்பாட்டை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.
தமிழர்களின் கலாசாரம், உணர்வுகளை காக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டை காக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.
தமிழர்களின் உயரிய கலாச்சாரத்தை கண்டு பெருமைப்படுகிறேன். இதில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரத்தை எண்ணி பெருமைப்படுவதாக இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கலை யொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
வளர்ச்சியில் புதிய உச்சங்களை அடைய தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழர்களின் பண்பாட்டை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.
தமிழர்களின் கலாசாரம், உணர்வுகளை காக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டை காக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.
தமிழர்களின் உயரிய கலாச்சாரத்தை கண்டு பெருமைப்படுகிறேன். இதில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X