search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்க கூடாது: மத்திய அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது
    X

    ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்க கூடாது: மத்திய அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது

    ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்க கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்றதுக்கொண்டது.

    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக ஒரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று அறிவித்தார்.

    இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையில் குறுக்கீடாமல் இருக்க ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்துக்கு தீர்ப்பு வழங்க கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று கோரிக்கை வைத்தது.

    இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வக்கீல் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோகத்கி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அடுத்த 1 வாரத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாது.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். அவசர சட்ட நடவடிக்கையில் தலையிடாமல் இருக்க 1 வார காலத்துக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×