என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பியில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு: கற்பழித்துக் கொலையா?
Byமாலை மலர்19 Jan 2017 11:35 AM GMT (Updated: 19 Jan 2017 11:35 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காட்டில் இளம் பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் காலித்பூர் என்ற கிராமத்தின் அருகில் உள்ள ஒரு காட்டில் இருந்து 18 வயது மிக்க இளம் பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையில் இன்று கிடந்துள்ளது. அதைப் பார்த்த அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், ஆடைகள் கலைந்த நிலையிலும், உடலில் கழுத்துப் பகுதிகளிலும் காயங்கள் இருப்பதால் அப்பெண் கற்பழிக்கப்பட்டு பின்னர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு செல்போன்களையும் கைப்பற்றியுள்ள போலீசார், அவை கொலையான பெண் மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமானது எனத் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த மர்ப நபரையும் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X