என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறோம்: காங்கிரஸ்
Byமாலை மலர்19 Jan 2017 10:01 AM GMT (Updated: 19 Jan 2017 10:01 AM GMT)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேபோல் தலைநகர் புதுடெல்லிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சுர்ஜிவாலா கூறுகையில், “கலாச்சார பாதுகாப்பு மற்றும் பழமையான பாரம்பரியமான ஜல்லிக்கட்டை பாதுகாக்க போராடி வரும் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். அதேபோல் பாதுகாப்பையும் அளிக்க உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டையும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதேபோல் தலைநகர் புதுடெல்லிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சுர்ஜிவாலா கூறுகையில், “கலாச்சார பாதுகாப்பு மற்றும் பழமையான பாரம்பரியமான ஜல்லிக்கட்டை பாதுகாக்க போராடி வரும் தமிழக மக்களின் உரிமைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். அதேபோல் பாதுகாப்பையும் அளிக்க உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டையும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X