search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு: போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்
    X

    ஜல்லிக்கட்டு: போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

    தமிழ்நாடு முழுவதும் வலுத்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டம் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய நடைபெற்று, இன்றும் தொடர்ந்து வருகிறது.மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

    இந்நிலையில் இளைஞர்களின் இந்த போராட்டத்துக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிக, நடிகையர் உள்ளிட்ட பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களில் கிரிக்கெட் நட்சத்திரங்களின் கருத்துக்களை இங்கே பார்ப்போம்.

    வீரேந்திர சேவாக்:

    இளைஞர்களின் போராட்டம் அறவழியில் நடந்து வருவதைப் பார்க்க அற்புதமாக உள்ளது. உங்களின் உணர்வுகளை அமைதியான வழியில் வெளிப்படுத்துங்கள். அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

    அஸ்வின் ரவிச்சந்திரன்:

    தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற ஒற்றுமையும், அறவழிப் போராட்டமும் தான் கோரிக்கைக்கு வலு சேர்க்கும்.

    முகம்மது கைஃப்:

    தங்கள் இதயத்திற்கு நெருக்கமான விஷயங்களுக்கு போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு. அமைதியான முறையில் போராட்டம் நடைபெற பிரார்த்தனை செய்கிறேன்.

    மார்க்கண்டேய கட்ஜூ (முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி):

    “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”.

    தமிழ்நாட்டில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×