search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சைக்குரிய காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி, பா.ஜ.க.வில் இணைந்தார்
    X

    சர்ச்சைக்குரிய காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி, பா.ஜ.க.வில் இணைந்தார்

    காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய தலைவர் என்.டி.திவாரி, தன் மகனுடன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர் என்.டி.திவாரி. 91 வயதான இவர் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராகவும் மத்திய அமைச்சரவையிலும் பணியாற்றியுள்ளார். இவர் தனது மகன் ரோகித் ஷேகர் உடன் காங்கிரசில் இருந்து விலகி தற்போது பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். 

    அடுத்த மாதம் 15-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திவாரி பா.ஜ.க.வில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    காங்கிரஸ் கட்சியில் அவருக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்காததால், தன்னை மீண்டும் அரசியலில் நிலை நிறுத்திக்கொள்ள அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

    திவாரி 2009-ம் ஆண்டில் ஆந்திரப்பிரதேச மாநில ஆளுநராக பணியாற்றும் போது இளம் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரகாண்ட் மாநிலத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முன்னணி தலைவர்கள் விலகி, பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றி கேள்விக்குறியாகி வருகிறது.
    Next Story
    ×