search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ”தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
    X

    ”தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

    உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், உச்சநீதி மன்ற முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

    மார்கண்டேய கட்ஜு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×